கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு மகிமை உண்டாவதாக.
உங்களை கர்த்தருடைய வசனத்தின் மூலமாக சந்திக்கச் செய்த என் தேவனை மனப்பூர்வமாக ஸ்தோத்தரிக்கிறேன்.
இன்று நாம் தாவீது எப்படி வெற்றி வாழ்க்கை வாழ்ந்தான்.
அல்லது எப்படி வெற்றி பெற்றான் என்று ஒரு சில வசனத்தின் மூலமாக காண்போம்.
மேல்ப்படிக்கு போகவேண்டுமால் முதலில் நாம் கீழ்ப்படிதல் அவசியம்.
அநேகர் இன்று உயர வேண்டும் என ஆசை உண்டு. ஆனால் அதற்காக உழைக்க நேரமுமில்லை மனமுமில்லை.
ஆனால் தாவீது அப்படியில்லை.
அதற்காக அதிக நேரம் செலவழித்தான், கடின உழைப்பு உழைத்தான்.
எல்லாவற்றையும் விட தான் விசுவாசித்திருக்கிறவர் இன்னார் என்றும் அவருடைய நாமமும் அதின் வல்லமையையும் அறிந்திருந்தான்.
அதையே பரிசுத்த பவுல் நமக்காக இவ்வாறு எழுதி வைத்திருக்கிறார்.
2 தீமோத்தேயு 1:12 – ல் ஏனென்றால், நான் விசுவாசித்திருக்கிறவர் இன்னார் என்று அறிவேன், நான் அவரிடத்தில் ஒப்புக்கொடுத்ததை அவர் அந்நாள்வரைக்கும் காத்துக்கொள்ள வல்லவராயிருக்கிறாரென்று நிச்சயித்துமிருக்கிறேன்.
தாவீது கர்த்தரை எப்படி அறிந்திருந்தான்?
1, சங்கீதம் 27:1 – கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன்?
மனிதர்களாகிய நாம் வெளிச்சத்தைப் பார்த்து அல்லது வெளிச்சத்தில் நடப்போம். தாவீதோ தேவனையே தனக்கு வெளிச்சமாகக் கொண்டான். தனக்கு ரோல் மாடலாக, ஹீரோவாக கண்டிருந்தான்.
நான் வெளிச்சத்திலே நடக்கிறேன். ஆகையினால் நான் யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியமில்லை. என்று தைரியமாய் நடந்தான்.
இன்று நம்மில் அநேகர் தாவீதைப் போல தைரியமாக சொல்ல முடியாமல் மனிதர்களைக் கண்டு பயந்து பயந்து வாழ்கிறோம். ஏனென்றால் நாம் நம்முடைய பார்வையை தேவன் மேல் வைக்காமல் யார் யார் மீதெல்லாமோ வைக்கிறோம். ஆகையினால் பயப்படுகிறோம்.
2, சங்கீதம் 27:1 – கர்த்தர் என் ஜீவனின் அரணானவர், யாருக்கு அஞ்சுவேன்?
என் ஜீவன் அவருக்குள் மறைந்திருக்கிறது.ஆகையினால் அவர் அறியாமல் என்னை எவருமே தொட முடியாது என்பதிலே தெளிவாயிருந்தான். ஆகையினால் தான் யுத்தத்திலே தன்னைவிட பெலசாலியான கோலியாத்தைக் கண்டோ? அல்லது அவனுடைய சேனைகளைக் கண்டோ? அவன் பயப்படாமல்,
சாமுவேல் 17:45. பெலிஸ்தனை நோக்கி: நீ பட்டயத்தோடும், ஈட்டியோடும், கேடகத்தோடும் என்னிடத்தில் வருகிறாய்; நானோ நீ நிந்தித்த இஸ்ரவேலுடைய இராணுவங்களின் தேவனாகிய சேனைகளுடைய கர்த்தரின் நாமத்திலே உன்னிடத்தில் வருகிறேன்.
சாமுவேல் 17: 37 ல் என்னைச் சிங்கத்தின் கைக்கும் கரடியின் கைக்கும் தப்புவித்த கர்த்தர் இந்தப் பெலிஸ்தனுடைய கைக்கும் தப்புவிப்பார் என்று சொல்ல முடிந்தது.
ஆனால் நாமோ ஒரு சிறு வியாதியைக் கண்டு மிகவும் பயந்து சோர்ந்து விடுகிறோம். போராடாமலே தோல்வியை ஒத்துக் கொள்ளுகிறோம்.
3, சங்கீதம் 23 ல் கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; ஏனெனில் தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்
கர்த்தர் தனக்கு நல்ல மேய்ப்பராக தன்னோடு இருக்கும் போது எந்த எதிரியோ, பிசாசோ, வியாதியோ, பிரச்சனைகளோ, எது வந்தாலும் என்னை அது அணுகிடாமல் தனக்கு பாதுகாப்பாய் இருந்து குறைவுகளை எல்லாம் அவருடைய மகிமைக்கு தக்கதாக நிறைவாக்குகிறவர் என்று அறிந்திருந்தான்.
ஆகையினால் பிசாசு அவனுக்கு விரோதமாக ராஜாவை, நண்பர்களை, பிள்ளைகளை எழுப்பிவிட்டாலும், அவன் கர்த்தரையே சார்ந்து வாழ்க்கையிலே வெற்றிப் பெற்றான்.
எல்லாவற்றைப் பார்க்கிலும் தாவீது:-
4, சங்கீதம் 34: 1. கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்திரிப்பேன்; அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும்.
சங்கீதம் 34: 8. கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்; அவர்மேல் நம்பிக்கையாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.
தாவீது எப்போதும், எல்லா சூழ்நிலையிலும் கர்த்தரை துதித்துக் கொண்டிருந்தான். கர்த்தர் நல்லவர் என்பதை எல்லா நாளிலும் ருசித்துக் கொண்டிருந்தான்.
எனவேதான் கர்த்தர் சொன்னார், 1 சாமுவேல் மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் என்றார். ஆகவேதான் கர்த்தர் தாவீதை என் இருதயத்துக்குப் பிரியமானவாகக் கண்டேன் என்று சொல்லி அவனோடு இருந்ததார். தாவீது செய்ததெல்லாவற்றிலும் அவனுக்கு வெற்றியைக் கொடுத்தார். அவன் கடந்து போன எவ்விடங்களிலேயும் ஜெயத்தொடு திரும்பும்படி கர்த்தர் செய்தார்.
ஆகவே இந்த வசனத்தை கேட்கிற நாமும் கர்த்தரை எல்லா காலத்திலும் துதித்து அவரை ருசித்து, நம்மை இரட்சித்தவர் எப்படிப்பட்டவர் என்று அறிந்து விசுவாசித்து வாழுவோம். நம்மையும் ஜெய வாழ்க்கை வாழச் செய்வார்.
கர்த்தர் நம் ஒவோருவரையும் ஆசீர்வதிப்பாராக.!
ஆமென்.!!!